Tuesday, April 14, 2020

18 - அனுராதா ரமணன் (1947-2010)




அனுராதா ரமணன் தஞ்சாவூரில் பிறந்தவர்.1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் பிறந்தவர்

அவரது தாத்தா..அந்த நாளைய நடிகர்.பெரும்பாலான திரைப்படத்தில் தந்தை வேடம் தாங்கி நடித்தவர்.அதனால் "அப்பா" பாலசுப்ரமணியம் என அறியப்பட்டவர்.

அனுராதா ரமணன் 800 புதினங்களும் 1230 சிறுகதைகளும் எழுதியுள்ளார் 30 ஆண்டுகளில்..

இவரது கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன.

இவரது கணவர் ரமணன். 18ஆவது வயதில் திருமணம்.28ஆவது வயதில் கணவனை இழந்தார்.மணவாழ்க்கை மொத்தம் பத்தே ஆண்டுகள்.இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.

 ஆனந்தவிகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது.

இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.

மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள்பாசம்கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன

தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம்ஜி ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.

ஓவியம் வரைவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தவர்.சென்னை எழும்பூர் ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றார்.பரீட்சை நேரம் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட, இடது கையினாலும் வரையப் பயின்று, பரீட்சையில் வென்றார்.

எழுத்தாளர் என்பதைத் தாண்டி இவர் செய்த மற்றொரு முக்கிய சாதனை, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் சொந்த வாழ்க்கைப் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அதற்கு தீர்வுகள் கூறியதுதான்.தினமலர் வார இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக,ஒவ்வொரு வாரமும் "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில், இவர் எழுதியுள்ள ஆலோசனைகளை, ஏராளமான வாசகர்கள் படித்து பயன் பெற்றனர்.

ஒரே வார இதழில், தொடர்ந்து ஒரு எழுத்தாளர் 15 வருடங்கள் தொடர்ந்து எழுதி வந்தது ஒரு சாதனையாகும்.

இவர் தன் வாழ்க்கை வரலாற்றை தனிப் புத்தகமாக எழுதவில்லையாயினும், தன் வாழ்க்கை அனுபவங்களை,எண்ண்னகளை,உணர்வுகளை நான்கு மாறுபட்ட புத்தகங்களாக எழுதியுள்ளார்.இதை, "மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்" என்ற பெயரில் மங்கையர்மலர் பத்திரிகையில் எழுதினார். 

இறந்த பிறகு த உடலை மருத்தவ படிப்பிற்காக தானம் செய்ய விரும்பினார்.ஆனால் 33 ஆண்டுகளுக்கு மேல் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமையால் ,உடலை தான்ம செய்ய இயலவில்லை.ஆனால் கண்கள் நன்றாக இருந்ததால் கண்தானம் செய்யப்பட்டது.

மே மாதம் 16ஆம் நாள் தனது 62ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

திரைப்படமான புதினங்கள்-
  • சிறை
  • கூட்டுப்புழுக்கள்
  • ஒரு மலரின் பயணம்
  • ஒரு வீடு இருவாசல்

தொலைக்காட்சி தொடர்கள் -
  • பாசம்
  • புன்னகை
  • அர்ச்சனைப் பூக்கள்
  • பன்னீர் புஷ்பங்கள்



.

No comments:

Post a Comment