Monday, April 20, 2020

29 - லட்சுமி கண்ணன்



1947ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர் லட்சுமி கண்ணன்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் இவரது குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது. பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின், தில்லி,கல்கத்தா(ஜாதவ்பூர்), கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, மற்றும் முதுகலைக்கல்வி பயின்று, நோபல்பரிசு பெற்ற சால்பெல்லோவின் படைப்புக்களை ஆய்வு செய்தமைக்காக ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகவும், சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் என்ற அமைப்பில் ஆய்வாளராகவும் (fellow) பணியாற்றியிருக்கிறார். ஜே.வால்டர் தாம்சன் கம்பெனியில் முதுநிலை எழுத்தராகவும், மொழி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

தமிழில் காவேரி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. சிறுகதை, குறுநாவல், கவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களிலும் எழுதி வருகிறார். தற்போது இவர் புதுதில்லியில் வசித்து வருகிறார்


தனது தமிழ் ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புக்கள் ஆங்கிலம்பிரெஞ்சு, ஜெர்மன், அரபுஇந்திமராத்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலக்கவிதை நூல்கள், நாவல், குறுநாவல்கள், தமிழில் சிறுகதைத்தொகுப்புகள், புதினம் என இதுவரை இவரது 21 நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவரது ஆங்கிலக் கவிதைகளும், பாலின வேறுபாடு, பின் காலனீயம், மொழியாக்க நுட்பங்கள் ஆகிய உள்ளடக்கங்களைக் கொண்ட இவரது பல ஆய்வுக் கட்டுரைகளும் இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களில் மட்டுமல்லாது மேலைநாடுகளிலிருந்து வெளிவரும் பல்வேறு இலக்கிய இதழ்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.காவேரியின் படைப்புக்கள் பலவும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டங்களில் இடம் பெற்றிருப்பதோடு எம்.ஃபில்., [இள முனைவர்] மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர்களின் கருத்தரங்குகளிலும், உலக இலக்கியம் தொடர்பான பல்வேறு ஆய்வரங்கங்களிலும் [கேம்ப்ரிட்ஜ், மாண்ட்ரியால், பிரிட்டிஷ் கவுன்சில், கலிஃபோர்னியா], தேசிய, சர்வதேசிய இலக்கிய, பண்பாட்டு உறைவிடத் திட்டங்களிலும், பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும், ஜெய்ப்பூர் [2013]ஹைதராபாத் [2013] இலக்கிய விழாக்களிலும், சண்டிகர் சாகித்திய அகாதமி நடத்திய இலக்கிய விழாவிலும் [2012] சிறப்பு அழைப்பின் பேரில் காவேரி பங்குபெற்றிருக்கிறார்.
 இவரது சிறுகதைகள்

  • ஓசைகள் (1984)
  • வெண்மை போர்த்தியது (1991)
  • இன்று மாலை என்னுடன்(1993),சென்னை,நர்மதா வெளியீடு.
  • எங்கும் வானம் (2001)
  • காவேரி கதைகள் (இரண்டு பாகங்களில், சிறுகதைத் தொகுப்புகள், மித்ர பதிப்பகம், 2007[2]
‘முத்துக்கள் பத்து’-அமிர்தா பதிப்பகம்(2015)

 நாவல் 

-------------------
ஆத்துக்குப் போகணும் என்னும் இவரது நாவல்,வீடு என்னும் பருப்பொருளைப் பல்வேறு குறீயீட்டுத் தளங்களுக்கு எடுத்துச் செல்லும் நுண்ணியல்பு வாய்ந்தது. தனது சிறுகதைகள் பலவற்றையும், ’ஆத்துக்குப் போகணும்’ என்னும் தனது புதினத்தையும் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்.

தி.ஜானகிராமனின், "மரப்பசு"விநையும், இந்திரா பார்த்தசாரதியின்,"திரைக்கு அப்பால்" நாவலினையும்

 ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது கவிதை நூல்கள்[தொகு]


  • Impessions (1974)
  • The Glow And The Grey (1976)
  • Exiled Gods (1985)
  • UNQUIET WATERS[2005]-New Delhi,Sahitya Akademi commemorating their Golden Jubilee celebrations,Ed.,By Keki N.Daruwala
ஆங்கிலம்(தன் படைப்புக்களைத் தானே பெயர்த்தவை)
  • Going Home: Novel. ஆத்துக்குப் போகணும் நாவலின் ஆங்கிலப்பெயர்ப்பு, Translated from the original Tamil by the author, Orient BlackSwan, Delhi, 1998, 1999.
  • India Gate and Other Stories: காவேரி எழுதிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில வடிவம்,Translated from the original Tamil by the author, Delhi, Orient BlackSwan, 1993.
  • Parijata and Other Stories: காவேரி எழுதிய குறுநாவல், Translated from the original Tamil by the author. Delhi, National Publishing House, 1992.
  • Rhythms: காவேரியின்’ஓசைகள்’, Translated from the original Tamil by the author. Delhi, Vikas Publishing House, 1986.
  • Nandanvan & Other Stories, Translated from the original Tamil by the author. Delhi, Orient BlackSwan, 2011.
இந்தி
  • Aakash hi Aakash: Penguin (with Yatra), 2007.
  • Laya Baddh: Bharatiya Jnanpith, New Delhi, 1990, 2nd edition, 2007.
  • Partein: K.K.Birla Foundation with Vaani Prakashan, New Delhi, 1996.

விருதுகள்

1.இவரது புனைகதைகளில் இடம்பெறும் விளிம்புநிலைப் பெண்கள் பற்றிய சித்தரிப்புக்காக ‘மஞ்சுளா ஸ்ரீனிவாஸ்’அறக்கட்டளையின் சிறந்த பெண்மணி விருது-2012
2.‘சவ்யாயாசி சதுக்கம்’சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை பரிசு-1995

No comments:

Post a Comment