Sunday, April 19, 2020

27 - ஹெப்சிபா ஜேசுதாசன்



ஹெப்சிபா ஜேசுதாசன் 1925ஆம் ஆண்டு பர்மாவில் பிறந்தவர்.இவரது தந்தை பர்மாவில் மர வணிகராய் இருந்தார்.தமிழ்நாடு குமரி மாவட்டம் தக்கலை,புலிப்புனம் எனும் ஊரைச் சேர்ந்தவர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இவரது குடும்பம் நாகர்கோயிலில் குடியேறியது.

நாகர்கோயிலில் பள்ளிப் படிப்பினை முடித்து,ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார்.

தமிழ் இலக்கிய வரலாற்றினை நான்கு பாகங்களில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

இவரது கணவர் ஜேசுதாசனும் ஒரு எழுத்தாளர். மிகவும் முற்போக்குக் கொண்ட தம்பதியினராய் இவர்கள் திகழ்ந்தனர்.

தன் கணவரின் தூண்டுதலால் இவர் "புத்தம்  வீடு" என்ற புதினத்தை 1964ஆம் ஆண்டு எழுதினார்.இப்புதினத்தைப் படித்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கண்டிப்பாக இதனை பதிப்பிக்க வேண்டும்.இது முக்கியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

இப்புதினம் தமிழின் தொடக்கக்கால நாவல்களில் முக்கியமான ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

புத்தம்வீடு மலையாளத்திலும், ஆங்கிலத்தில் "Lissy's Legacy" என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

கிறித்துவ மதத்தில் சாதிகள் கிடையாது என்று சொல்லி, தனது இளைய மகனுக்கு தாழ்த்தப்பட்டதாக அந்தநாளில் சொல்லப்பட்ட ஒரு சாதியிலிருந்து பெண் எடுத்து மணம் செய்வித்தார்.

தமிழ் இலக்கிiயத்தை நேசித்தார் இவர்.இலக்கியத்தை பொறுத்த மட்டில் எந்த  சமரசமும் செய்து கொள்ளவில்லை.தங்கள் மதம் சேர்ந்த இலக்கியங்களைவிட ராமாயணக் காப்பியம் மீது தனி ஈடுபாடு கொண்டார்.தனது முதல் மகனுக்கு நம்பி (ராமன்) என்றும், மகளுக்கு பூவி (பூமாதேவி) என்றும் பெயர் வைத்தார்.

இவரது மற்ற புதினங்கள்

"புத்தம் வீடு"

"டாக்டர் செல்லப்பா" (1967)

"அனாதை" (1978)

"மா - னீ" (1982)

2002ல் விளக்கு விருது வழங்கப்பட்டது.

ஆங்கில நூல்கள்
--------------------------

  • Count-down from Solomon, or, The Tamils down the ages through their literature.
    • Vol. 1 Caṅkam and the aftermath, 1999
    • Vol. 2 Bhakti, ethics and epics, 1999
    • Vol. 3 Kampan, 2001
    • Vol. 4 13th - 20th century A.D.
  • An early Sheaf (கவிதைகள்)
  • Sky Lights (கவிதைகள்)
  • en- Exercises (கட்டுரைகள்)
  • Tit-bits for Tinytots (சிறுவர் இலக்கியம்)
  • STORY TIMES DARLINGS (சிறுவர் இலக்கியம்)
  • Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)

கணவர் ஜேசுதாசன் 2002ல் காலமானார். ஹெப்சிபா அவரது இறுதிக் காலத்தை மதச்சேவையில் கழித்தார்.புலிப்புனத்தில் 2012 ஃபெப்ருவரி 9ஆம் நாள் காலமானார்.





No comments:

Post a Comment