Friday, April 24, 2020

34- பூரணி



1917ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் ராமசாமி ஐயர்,சீதாலட்சுமி தம்பதிகளுக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர் சம்பூர்ணம்.

இவர் பூரணி என்ற பெயரில் 80ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள்,கவிதை,கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

ராமசாமி ஐயர் ஒரு தமிழ்ப்பண்டிதர்.1864ல் பிறந்த இவர் தொல்காப்பியத்திற்கு எளிய உரையினை எழுதியவர்.


பூரணி 1927 இல் கவிதை எழுத .ஆரம்பித்தார். 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். 1937 இல் பழனியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சித்தன் இதழ்களிலும், கோவையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பாரத ஜோதி இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகி உள்ளன கணையாழி, புதிய பார்வை, படித்துறை, அணி ஆகிய இலக்கிய இதழ்கள் பலவற்றிலும் இலக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார். திண்ண இணைய இதழிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

  • பூரணி கவிதைகள் காலச்சுவடு வெளியீடு, 2003
  • பூரணி நினைவலைகள் (தன்வரலாறு), 
  • பூரணி சிறுகதைகள்
  • செவிவழிக் கதைகள்,

  • 2004ஆம் ஆண்டு திருப்பூர் சக்தி இலக்கிய விருது
  • 2007ஆம் ஆண்டு பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கமும் இலக்கிய சேவைக்கான பாராட்டும்

2013 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று அதிகாலை 2 மணி அளவில், நிறைவாழ்வு வாழ்ந்த ‘பூரணி’ என்னும் சம்பூர்ணம் அம்மாள் கயிலாயப் பதவி அடைந்தார்.

இவரது மகள் கிருஷாங்கணியும் ஒரு கவிஞர், எழுத்தாளர் ஆவார்.இவரது இயற்பெயர் பிருந்தா ஆகும். இவரது கணவர் பெயர் நாகராஜன் ஆகும். இவர் கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவர் கானல் சதுரம் (1998), கவிதைகள் கையெழுத்தில் (2001) ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.  பறத்தல் அதன் சுதந்திரம் (2001) எனும் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாசிரியர் ஆவார். இவர் ஓவியங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர் ஆவார்.

No comments:

Post a Comment