Monday, April 6, 2020

7 - குமுதினி - (1905- 1986)



1905ஆம் ஆண்டு பிறந்தவர் குமுதினி.

குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. தந்தை சீனிவாச ஆச்சாரியார்; தாய் இலக்குமி அம்மாள். பெற்றோர்கள் இருவரும் கல்வியில் சிறந்தவர்களாக இருந்ததால் குமுதினி வீட்டில் இருந்தவாறு தமிழும் சமஸ்கிருதமும் கற்றார். இலக்கிய ஆர்வமும் இளமையிலேயே ஏற்பட்டது.

 சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைகள் எழுதிய படைப்பாளியாகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் விளங்கியவர். 1930-40 ஆண்டுகளில் ஆனந்த விகடன், கல்கி,கலைமகள்,மங்கை போன்ற இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ், சமஸ்கிருதம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவையன்றி வங்காளம், குஜராத்தி,, இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். காந்தியக் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். பெண்களின் அவலநிலைகளைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளார்.

1930 களில் இவர் ஆனந்தவிகடனில் "பொழுது போக்கு" என்ற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதினார்.பல்வேறுத் தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் "சில்லறை சங்கதிகள்" என்று 1948ல் வெளியிடப்பட்டன.

இவர் ராஜஸ்தான்,குஜராத்ஆகிய மாநிலங்களுக்கும்,துவாரகா,ஆக்ரா,இமாலயம்,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதினார்.

மலேசியா,சிங்கப்பூர், அமெரிக்கா,இங்கிலாந்து,ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார்.

சமய, ஆன்மீக நூல்களை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.நம்மாழ்வாரின் நூறு பாசுரங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வந்தது. ஜே சி குமரப்பாவின் ஒரு ஆங்கியல நூலை "ஏசுநாதர் போதனை" என்ற பெயரில் தமிழாக்கம் செய்தார்."கிராம இயக்கம்"ஏனும் நூலை மொழிபெயர்த்தார்.

ரவிந்திரநாத தாகூரின் "யோகாயோக்" எனும் புதினத்தை மொழிபெயர்த்தார்.பெண்களின் அவலநிலைகளை சுட்டிக் காட்டிய புதினம் அது.

1929ல் "குடும்பக் காதல்" எனும் ஓரங்க நாடகத்தை எழுதினார்.இந்நாடகம் பொருளார்ந்த நகைச்சுவையுடன் எழுதப்பட்டது."விசுவாமித்திரர்","டில்லி சென்ற நம்பெருமாள்" என்ற நாடகங்களை எழுதினார்.திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியார் சந்நிதி உள்ளதை எண்ணிப் பெருமிதம் கொண்டு இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிகோலும் துலுக்க நாச்சியார் பற்றி ஒரு நாடகம் எழுதினார்.இந்நாடகம் திருவரங்கத்தில் 1975ஆம் ஆண்டு அரங்கேறியது."புத்திமதிகள்" எனும் நாடகம் 1981ல் எழுதப்பட்டு அரங்கேறியது.

குமுதினியின் சிறுகதைகளில் நகைச்சுவை பரவலாக இருக்கும்.இந்தி மொழி,கதர் தேசியம்,விடுதலைப் போரட்டம்,குழந்தை வளர்ப்பு எனப் பல விஷயங்களைப் பற்றி எழுதினார்."௳க்கள் மலர்ச்சி" எனும் இவரது நூல் 1944ஆம் ஆண்டு வெளிவந்தது."திவாம் மகள்" எனும் புதினம் சாதி மறுப்புத் திரு௳னத்தின் தேவையை சித்தரித்தது.குடும்ப வாழ்க்கை,கணவன்-மனைவி உறவுகள் ஆகியனவும் ,பெண்களின் கல்வி,துணிவு,தொழில் போன்றனவும் குமுதினியின் படைப்புகளில் இடம் பெற்றன.காவிரிக் கரையருகில் உள்ள திருவரங்கத்தின் வரலாறு அந்நகராட்சியின் செயல்பாடு,கல்வி ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டின.நாட்டு மருத்துவம்,சமையல் குறிப்புகள்,யாத்திரை செய்ய வேண்டிய புண்ணியத் தலங்கள் போன்ற பல செய்திகளைச் சேகரித்து"சதாங்கம்-ஆயிரம் விஷயம்" எனும் பெரிய நூலை எழுதி வெளியிட்டார்.

காந்தியக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு குமுதினி கதராடை உடுத்திக் கொண்டார்.கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிட்டார்.வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.காந்தியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.திருவரங்கத்தில் வாழ்விழந்த பெண்களுக்காக ஒரு சங்கமும்,பள்ளியும் தோற்றுவித்தார்.காந்தியடிகளின் நினைவாகத் திருச்சியில் சேவா சங்கத்தை தோற்றுவித்தார்

இப்படி பல சமூக சேவைகளை செய்தார்.

1980 ஆம் ஆண்டு அமரர் ஆனார்.


No comments:

Post a Comment