Saturday, April 25, 2020

36 - கி சாவித்திரி அம்மாள்



முற்போக்கு சிந்தனைக் கொண்ட சவித்திரி அம்மாள் 1898 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் நன்கு அறிந்தவர்.

செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,அவர் இரு புடவைகளே வைத்திருப்பார்.ஒன்று துவைத்து காயப் போட்டிருப்பார்.ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பார்..அவ்வளவுதான்.ஆடம்பரம் இல்லா வாழ்வு வாழ்ந்தவர்.

பதினைந்து வய்தில் எழுதத் தொடங்கினார்.அந்த வயதினிலேயே ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றினை "ஹேமலதை" என்ற பெயரில் மொழி
பெயர்த்தார்.பின்னர் இது நூலகாவும் வந்தது

. F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது.

1956ல் "கல்பகம்" என்ற புதினத்தை எழுதினார்.காதலன் தன்னைப் புறக்கணித்ததும். எந்த வித நீண்ட விவாதமோ..வசனங்களோ இல்லாமல்..அவனைக் காதலித்தது தன் தவறு என்ற பெண் பாத்திரத்தைப் படைத்தார் அதில்.

இவரது கதைகள் கல்கி, கலைமகள் ஆகிய இதழ்களில் வெளி வந்தன.

1958ல் அவரது சொத்துகளின் பெரும்பகுதியை தானமாகக் கொடுத்தார்மயிலையில் இயங்கி வரும் சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி இவர் பெயரைத் தாங்கியே இருக்கின்றது..

தவிர்த்து, லேடி சிவசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளி,மற்றும் வித்யா மந்திர் பள்ளிகள் இயங்குவதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

எளிமை,கல்வியறிவு,யாரையும் சாரா சுதந்திரம்,சுய நம்பிக்கை,இலக்கிய ஆர்வம், ஈகைக் குணம் ஆகியவற்றின் மொத்த உருவாய்த் திகழ்ந்தவர் 1992ஆம் ஆண்டு அமரர் ஆனார்.

சாவித்திரி அம்மாளின் சகோதரி கி சரஸ்வதி அம்மாளும் ஒரு எழுத்தாளர் ஆவார்.
மனோதத்துவரீதியில் "கன்றின் குரல்" என்ற வித்தியாசமான நூலினை எழுதியவர்.இளம் மாணவன் ஒருவன் தன்னைவிட மூத்தப் பெண்ணைக் காதலிப்பதைக் கருவாகக்கொண்ட நாவல் "calf love" என்பதை "கன்றின் குரல்" என மாற்றினார்.

.

No comments:

Post a Comment