Tuesday, April 7, 2020

8 - ஆர். சூடாமணி (1931-2010)


Jump to navigationJump to search

1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் நாள் சென்னையில் பிறந்தவர் ஆர்.சூடாமணி ஆவார்.

இளம் வயதிலேயே பெரியம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றினார்.இவரது தாயார் பெயர் கனகவல்லி.தந்தை டி என் எஸ் ராகவன் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி ஆவார்.இவருக்கு சகோதரிகள் இருவர் மற்றும் ஒரு சகோதரர்.பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர்கள் முன்னரே காலமாகிவிட்டனர். பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளர்.சூடாமணி திருமணம் செய்துகொள்ளவில்லை.ஏராளமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட இவர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தம் உலகை அமைத்துக்கொண்டவர்.


உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர்.இவர் ஏராளமான சிறுகதைகளியயும்,புதினங்களையும் எழுதியுள்ளார்.கலைமகள்,சுதேசமித்திரன்,தினமணி கதிர் ,கல்கி, ஆனந்த விகடன் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதினார்.

சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களை எழுதினார்.

இவரது முதலாவது சிறுகதை காவேரி என்ற பெயரில் 1957 இல் பிரசுரமானது.1960 இல் தனது மனதுக்கு இனியவள் என்ற புதினத்தை எழுதினார். இருவர் கண்டனர் என்ற இவர் எழுதிய நாடகம் பல முறை மேடையேற்றப்பட்டது. பல இலக்கிய விருதுகளைப் பெற்ற ஆர். சூடாமணி ஆரவாரம் இல்லாமல், மிக எளிமையாக, மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும், குறிப்பாக பெண்களையும் பற்றி நிறைய எழுதியுள்ளார். இரவுச்சுடர் என்ற இவரது கதை “யாமினி” என்ற பெயரில் 1996 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 'சூடாமணியின் கதைகள்' என்கிற பெயரில் இவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று வெளிவந்தது. 

1957முதல் அரைநூற்றாண்டு காலகட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் ஆங்கிலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்."உள்ளக் கடல்' என்ற நாவலையும்,எழுதியுள்ளார்.

இவரின் வாழ்வியல்,இவர் ஐம்பது வருடக் காலம் வாழ்ந்த பிரிட்டிஷ் காலத்து சென்னை வீடு,எழுத்து,ஓவியம்,படித்த புத்தகங்கள் என்று எல்லாவற்றினையும் கோடிக்காட்டும் "அழகின் எளிமை" எனும் 27 நிமிடக் குறும்படம் ஒன்றை ஓவியர் மோனிக்கா என்பவர் இயக்கி இருக்கிறார்.சூடாமணியின் மறைவிற்குப் பின் உருவான படம் இது.

இவ்ரின் 63 சிறுகதைகளை எழுத்தாளர்கள் சீதாரவி,கே பாரதி தொகுத்துக் கொடுக்க காலச்சுவடு பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.நூலின் பெயர் "தனிமைத் தளிர்".

இளம் வயதில் முறைப்படி ஓவியம் கற்றிருந்த இவர் நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார். வெகுகாலம் வெளியுலகுக்கு வராத இவரது ஓவியங்கள் 2011 ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஆர்ட் சென்டரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.



எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் தமது சொத்துகளின் கிரய மதிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் மூன்று நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தவர்.சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது.நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான் என்று ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் அறங்காவலர் நல்லி குப்புசாமி குறிப்பிடுகிறார்


  • ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
  • ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம்
  • வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி [3]

இவரது வீடு விற்று வந்த தொகை, 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே ஐம்பது லட்சமும், 2012 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயும்

ராமகிருஷ்ணா மிஷின் மாணவர் இல்லம்
ஸ்ரிராமகிருஷ்ணா மடம்
வாலன்டரி ஹெல்த் சர்வீசச்,தரமணி

ஆக இந்த மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் பெற்றுள்ள விருதுகள்-

  • கலைமகள் வெள்ளி விழா விருதும் பரிசும் மனத்துக்கினியவள் நாவலுக்காக (1957)[1]
  • இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது "நான்காவது ஆசிரமம்' என்ற சிறுகதைக்காகப் பெற்றார்.
  • ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில், "இருவர் கண்டனர்' என்ற நாடகத்துக்காக 2-ம் பரிசைப் பெற்றுள்ளார்.
  • "பபாசி' அமைப்பு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு 2009 ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக்கொண்ட அவர், பல்வேறு சேவை நிறுவனங்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்து வழங்கினார்.
  • இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதப் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். கீழே இலக்கியச் சிந்தனையின் மாதப் பரிசு பெற்ற சிறுகதைகள்

மாலைமலர்ச்சி,கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி,தரிசனம்,புவனாவும் வியாழக் கிரகமும்,இறுக மூடிய கதவுகள்,ஊனமும் உள்ளமும்,அரும்பு உலகம், நாம் என்ன செய்வது.

ஒரு முக்கிய எழுத்தாளராக இவர் இருந்தும், இலக்கியக் கூட்டங்களுக்கு செல்வது,நேர்காணல், டி வி பேட்டி போன்ற செயல்களைத் தவிர்த்தார்.அக உலகிலேயே வாழ்ந்திருந்தார்.அதிலேயே அமைதியும், உன்னதமும் கண்டார்.

கண்தெரியாதவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களை சந்தித்தார்.அவர்களீடம் கனிவோடு பேசியதுடன்..அவர்களுக்கு படிக்க முடியாது என்பதால்..அவர்களுக்காக தான் கதைகளைப் படித்துக் காட்டினார். 

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் அமரர் ஆனார்










1 comment:

  1. நான் இன்றுதான் அவரைப் பற்றி அறிந்து கொண்டேன், நன்றி.

    ReplyDelete