Monday, April 27, 2020

38 - உஷா சுப்ரமணியம்



வாரணசி எனும் காசியில் பிறந்தவர் உஷா.அவரது அப்பா ஒரு  விஞஞானி.பனாரஸ் யூனிவெர்சிடியில் கெமிஸ்ட்ரி புரஃபெசர் ஆக இருந்தவர்.இவர் குழந்தையாய் இருக்கையில் இவரைப் பார்த்துக் கொண்டது பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் தான்.அவர்தான் இவர்கள் குடும்பத்தின் காட்மதர் எனலாம்.


பல டி.வி. தொடர்களை எழுதி இயக்கியவர்.உலக எழுத்தாளர் மகாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளரும் இவரே!


யுனிசெஃப், உலக வங்கிகள் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கு ஆவணப்படங்கள் எடுத்துத் தந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இவர் கல்லூரி படிப்பை ஆறு தங்கப் பதக்கங்களுடன் வாங்கி வெளியே வந்த போது,இவர் தாய்..தந்தை மேலே படிக்கச் சொன்னபோது இவர் சொன்ன பதில் "நான் கதை எழுதப்போகிறேன்" என்றதுதான்.பிறகு கல்யாணத்திற்குப் பிறகு மெட்ராஸ் யூனிவெர்சிடியில் ஜர்னலிசம் படித்து முடித்தார

ஒருநாள் திடீரென் அஒரு கதைக்கான கரு மனதில் தோன்ற அதை எழுதி..அதற்கு "வடிகால்" எனப் பெயரிட்டு விகடனுக்கு அனுப்ப..அந்த முதல் கதையே முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

அடுத்து "மனிதன் தீவல்லன்" விகடனில் தனிப் புத்தகமாகவே வந்தது.

அடுத்து அமரர் ராமரத்னம் நாவல் போட்டியில் இவர் எழுதிய நாவலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

கணையாழியில் "நீயுமா புரூட்டஸ்" என்ற கதை வந்தது.

பிறகு சாவியில் "சில நினைவுகள் சில நிகழ்ச்சிகள்" எனும் தொடர்.

சிறுகதைகள் நானூறுக்கும் மேலாக எழுதியுள்ளார்.30நாவல்கள் எழுதியுள்ளார்.

தொலைக்காட்சிக்காக 'லேடீஸ் ஹாஸ்டல்"  என்ற ஸ்கிரிப்ட் எழுதினார்.அது ஹிட்.பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

உஷா சுப்ரமணியம் ‘பெண் ஒரு கண்ணோட்டம்’ கட்டுரையில் சொல்லியுள்ளது-.
நான் வாழ்வில் நிறையப் போராடியிருக்கிறேன். நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் ஒரு பெண்ணாக வாழ்ந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.





No comments:

Post a Comment