Tuesday, April 28, 2020

40 - மேலும் சிலர்

கௌரி அம்மாள்
-----------------------
குடும்ப சூழ்நிலை காரணமாக,சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முயலாமல் போனவர்.

குடும்பக் கப்பல் நிலை தடுமாறாமல் இருக்க  தாய் எவ்வளவு முக்கியம் எனக் கூறும் "கடிவாளம்" எனும்  புதினத்தை 1948ஆம் ஆண்டு எழுதினார்..

"வீட்டுக்கு வீடு" என்ற இவரது சிறுகதி தொகுப்பும் வந்துள்ளது.

ஆனந்தி
-------------------

காலத்தால் அழியாத 'பொன்னியின் செல்வன்" படைத்த கல்கியின் புதல்வி.இப்புதினம் மொத்தம் 165அத்தியாயங்கள் நான்கு பாகங்களாக வந்துள்ளது.

இதன் 26ஆம் அத்தியாயத்துடன் கல்கி அமரர் ஆனார்.பின் அவர் விட்டுச் சென்ற குறிப்புகளை வைத்து..சற்றும் சுவாரசியம் குறையாமல் அப்புதினத்தை எழுதி முடித்தார் ஆனந்தி.

கல்கியில் பல பயணத்தொடர், ஆன்மீகத் தொடர்களை எழுதியுள்ளார்.

கல்கியில் இவர் எழுதிய "மலைச்சாரல் மாதவி" புதினம் இன்றளவும் பேஸப்படும் ஒன்றாகும்


கமலா பத்மநாபன்
------------------------
தஞ்சாவூரைச் சேர்ந்த டெபுடி கலெக்டரான, பிரம்மஞான சபையைச் சார்ந்த டி.வி.கோபாலசாமி ஐயரின் பேத்தி. சங்கீதத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். வயலின் கற்றிருந்தார். முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினாலும், அவரின் பெரும் கவனம் தமிழின் மீதே இருந்தது.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் இளம் வயதில் (32) இயற்கை எய்தினார். 1933ல் இருந்து 1942 வரை சுமார் பத்து வருடங்களில் இவரின் படைப்பாற்றல் வியக்க வைப்பவை.
எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்து குறு நாவல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இதழ்களான பாரதமணி, ஜகன் மோகினி, கலைமகள், சுதேசமித்திரன் போன்றவற்றில் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதியவர். அவரின் காலத்தில் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவராக மதிக்கப்பட்டவர். 


No comments:

Post a Comment